
மத்தியப் பிரதேசம் இந்தூரில் பரபரப்பை ஏற்படுத்திய ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் புதிய திருப்பங்கள் தொடர் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. செவ்வாய்க்கிழமை இரவு, இந்தூரின் தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்தில், ராஜாவின் கொலைக்குத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நால்வரை மேகாலயா காவல்துறையினர் ஷில்லாங்கிற்கு அழைத்துச் செல்லும்போது, ஒரு பயணி திடீரென அதில் ஒருவரை அறைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த நபர் அடித்ததோடு அவரை தூக்கில் போடுங்கள் என கோபமாக கூறினார். இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.
குற்றவாளிகள் முகமூடி அணிந்திருந்ததால், யாரை அறைந்தார் என்பது தெரியவில்லை. அவர்களில் கொலை செய்யப்பட்ட ரகுவின் மனைவி சோனத்தின் காதலனான ராஜ் குஷ்வா, விஷால் சவுகான், ஆகாஷ் ராஜ்புத் மற்றும் ஆனந்த் குர்மி ஆகியோர் அடங்குவார்கள். சம்பவம் நடந்தபின், இந்தூரின் கூடுதல் துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியா இதை உறுதி செய்துள்ளார். மேலும், விசாரணையின் ஒரு பகுதியாக, விஷால் சவுகானின் வீட்டில் நடந்த சோதனையில், கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரத்தக்கறை உள்ள ஆடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏசிபி பூனம்சந்திர யாதவ் தெரிவித்துள்ளார். அவை தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
राजा रघुवंशी हत्याकांड को लेकर देशभर में आक्रोश का माहौल है. इसी बीच एक वीडियो सामने आया है जिसके मुताबिक इस मामले के एक आरोपी को जब इंदौर एयरपोर्ट में ले जाया जा रहा था तभी एक आक्रोशित पैसेंजर ने उसे थप्पड़ जड़ दिया. सोशल मीडिया पर ये वीडियो काफी वायरल है.#RajaRaghuvanshi… pic.twitter.com/73uyExRdO0
— AajTak (@aajtak) June 11, 2025
ராஜா ரகுவன்ஷியின் மனைவி சோனம், தனது காதலன் ராஜ் குஷ்வாவுடன் சேர்ந்து மூன்று கூலி கொலையாளிகளை பயன்படுத்தி, மே 23 அன்று மேகாலயாவில் ராஜாவை திட்டமிட்டு கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. மே 2 அன்று அவரது உடல் சோஹ்ரா பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டது. சோனம், மே 25–27 இடையில் இந்தூரில் தங்கி இருந்ததும், பின்னர் காஜிப்பூரில் சரணடைந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொலை வழக்கில் மேகலயா காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (SIT) தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.