உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் கொத்வாலி திகாத்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவத்தில் வீடியோ நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான 21 வயது இளம்பெண் கடந்த திங்கட்கிழமை தன்னுடைய மாமா வீட்டிற்கு சென்று விட்டு இரவு ஏழு மணி அளவில் தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.

அந்தப் பெண் செல்லும் வழியில் ஒரு கும்பல் லிஃப்ட் தருவதாக கூறி துரத்தியுள்ளனர். சுமார் ஐந்து முதல் ஆறு பைக்குகளில் தெருவில் அந்த கும்பல் அந்த பெண்ணை துரத்தி சென்று ஒரு வயல்வெளியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இந்த வழக்கில் இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து போலீஸார் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.