நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த 2 பேர், கலர் புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் கூறுகையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடு நமது ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் நாடாளுமன்றத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. தவறு செய்தவர்கள் மீது தாமதமின்றி விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.