நாகை மற்றும் இலங்க இடையேயான போக்குவரத்து கப்பல் சேவை கடந்த 14ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் உடன் நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாத இடைவேளைக்கு பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இலங்கை சென்றுள்ள சுற்றுலாப் பயணிகள் அவசர அவசரமாக சொந்த ஊர் திரும்புகின்றனர். திடீர் நிறுத்தத்திற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.