
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சுமார் 15 தெரு நாய்கள் ஒரு பெண்ணை கடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. சமீபகாலமாகவே தெருநாய்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கானாவில் 15 தெருநாய்கள் ஒரு பெண்ணை தாக்கியுள்ளன. காலை நடை பயிற்சி மேற்கொண்டிருந்த போது நாய்கள் விடாமல் கடித்த நிலையில் தன்னுடைய செருப்பைக் கொண்டு தடுத்து அந்தப் பெண் தப்பியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு நாய்களுக்கு உணவு வழங்குவதை குடியிருப்பு வாசிகள் நிறுத்த வேண்டும் என்றும் அவருடைய கணவர் வீடியோ வெளியிட்டு வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.