
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில், விடுப்பில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பீம் பிரகாஷ் மற்றும் அவரது சகோதரர் கான்ஸ்டபிள் லட்சுமிசந்த் ஆகியோர், ஒரு பெண்ணையும் அவரது சகோதரரையும் பொது இடத்தில் தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 14ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், குஞ்சல்பூர் கிராமத்தில் நாய் கடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் உருவானதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோவில், சிவில் உடையில் உள்ள இரண்டு காவல்துறையினர், ஒரு சிறுவனையும் அவரது சகோதரியையும் கம்பால் அடிக்கிறார்கள்.
योगीराज में बेलगाम हो चुके पुलिस कर्मियों की गुंडागर्दी देखिए-
वीडियो अलीगढ़ का है जहां एक दारोगा और सिपाही ने नाबालिग भाई-बहन की सरेआम लाठी-डंडों से पिटाई कर दी।
जब रक्षक ही भक्षक बन जाएं, तो समझ लीजिए कि सरकार ने लोकतंत्र को गिरवी रख दिया है।
अराजकता और खुलेआम गुंडागर्दी ही… pic.twitter.com/gdWtC861E1
— UP Congress (@INCUttarPradesh) June 16, 2025
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது தொடர்பாக அட்ராலி காவல் நிலையத்தில் இரு காவல்துறையினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பீம் பிரகாஷ் தற்போது சஹாரன்பூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார், அவரது சகோதரர் லட்சுமிசந்த் பரேலியில் கான்ஸ்டபிளாக உள்ளார்.
இவர்கள் கிராமத்திற்கு விடுப்பில் வந்தபோது, நாய் கடித்ததால் ஏற்பட்ட பிரச்சனையை காரணமாகக் கொண்டு, ஏற்பட்ட தகராறு இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் வீடியோ பரவிய பிறகு, பொதுமக்கள் மத்தியில் இந்த சம்பவம் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்துறை அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.