கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்ரேயா என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த 13 ஆம் தேதி தன்னுடைய அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வதற்காக ஒரு பைக் டாக்ஸியை முன்பதிவு செய்தார். அப்போது சுகாஸ் என்ற பைக் டாக்ஸி ஓட்டுனர் அங்கு வந்தார்.

அவர் வேகமாக சென்றதோடு சிக்னலில் நிற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு குறுகிய பாதையில் அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். இதனால் அந்த பெண் அவரிடம் எதற்காக இவ்வளவு வேகமாக வேறு பாதையில் செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

 

அதற்கு சுகாஷ் நான் மூன்று வருடங்களாக பைக் டாக்ஸி ஓட்டுகிறேன் எனக்கு எப்படி ஓட்ட வேண்டும் என்று தெரியும் எனக் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் கோபத்தில் அவர் ஸ்ரேயாவை கன்னத்தில் அறைந்து விட்டார். இதில் அந்த பெண் நிலை தடுமாறு கீழே விழுந்த நிலையில் இதனை அங்கிருந்து சிலர் வீடியோவாக எடுத்து பதிவிட்ட சமூக வலைதளத்தில் வைரலாகியது.

இது தொடர்பாக ஸ்ரேயா காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் சுகாஷை அழைத்து விசாரணை செய்ததில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தற்போது போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.