
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரு காதல் ஜோடி பைக்கில் அத்துமீறி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வாலிபர் பைக் ஓட்டிய நிலையில் அவரது காதலி முன்னாள் அமர்ந்து கொண்டு அவரை கட்டிப்பிடித்தபிடியே சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடியோவை வைத்து சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டுள்ளனர்.
அந்த காதல் ஜோடிக்கு போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக 53500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான தகவலை போலீசார் தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும் இந்த தகவலை நொய்டா காவல்துறையினர் பகிர்ந்துள்ள நிலையில் தற்போது போலீசாருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருவதோடு அந்த காதல் ஜோடிக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Well Done Noida Police 👏🫡
A video of a couple hugging on a moving bike goes viral. Traffic police respond with a Challan of ₹53,500. pic.twitter.com/Cla5eHMVgm
— Gems (@gemsofbabus_) June 16, 2025