நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடிப்பை விட பேஷனில் அதிக ஆர்வமும், ஈர்ப்பும் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் குடும்பத்தினர் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லியதாகவும், இதனால் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் instagramல் ரசிகர் ஒருவர் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து கேள்வி கேட்க அதற்கு கீர்த்தி சுரேஷ் வடிவேலு புகைப்படத்தை போட்டு பதில் அளித்தார். அந்த புகைப்படம் திருமணம் பற்றி தற்போது கீர்த்தி சுரேஷ் யோசிக்கவில்லை என்பது உணர்த்துவதாக இருந்தது. இதையடுத்து ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று நினைத்தால் இப்படி சொல்லிட்டாங்க என்று பேசி வருகின்றனர்