தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு பல்வேறு தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்வீட்டர் பக்கத்தில்  மாரிமுத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், திரைப்பட இயக்குநர் ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகர். என்மீது பேரன்பும் பெரும்பற்றும் கொண்ட என் உயிர்க்கினிய சகோதரர் மாரிமுத்து அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார் என்ற  செய்தி கேட்டு  பேரதிர்ச்சியும் பெரும் மனவேதனையும் அடைந்தேன். அன்பு சகோதரர் மாரிமுத்துவின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்து இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன். சகோதரர் மாரிமுத்து அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம் என தெரிவித்துள்ளார்.