நடிகர் ரஞ்சித் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு ரஞ்சித் மேலும் பிரபலமானார். சமீபத்தில் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, ஒரு நடிகர் என்பதால் வெளியே தெரிகிறது. அதை பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது.

போதைப் பொருட்களை விற்பவர்கள் ஜம்முன்னு இருக்காங்க. பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார்கள். போதை பொருளை யார் விற்கிறார்கள்? அதற்கு பின்னாடி யார் இருக்கிறார்கள்? என்று நமக்கு தெரியாது. ஒரு அரசாங்கம் நினைத்தால் அதை தடுக்க முடியும்.

ஒரு போதையை மட்டும் தான் போதையாக நினைக்கிறோம். அப்படி என்றால் டாஸ்மார்க் என்னது? தமிழ்நாடு முழுக்க சத்து டானிக் விற்று கொண்டிருக்கிறார்களா? அதை வாங்கி குடித்தால் மட்டும் உடம்புக்கு நல்லதா? அதுவும் ஒரு போதை தானே? மூளைக்கு போகும் ஆக்சிஜனை இதுவும் தடுக்கும். அதுவும் தடுக்கும்.

இரண்டு நடிகர்கள் மாட்டிக்கொண்டார்கள் என்பதால் இனிமேல் பலரும் அதை பயன்படுத்தாமல் இருப்பாங்க. போதை பொருளால் ஒருவர் வாழ்க்கையை இழந்து விடுகிறார். காலையில் குடிக்க மாட்டேன் என சத்தியம் செய்து விட்டு மாலையில் ஏதாவது காரணம் சொல்லி மீண்டும் குடிக்கிறார்கள்.

அதை இல்லாமல் செய்தால் மட்டுமே போதை இல்லா வாழ்க்கை என்பது சாத்தியம். டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துக்கொண்டு மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று சொன்னால் எப்படி? பக்கத்திலேயே வைத்துக்கொண்டு என்னால் எப்படி குடிக்காமல் இருக்க முடியும்? அதை முழுவதுமாக வேர் அறுத்தால் அனைத்தும் சாத்தியம் எனக் கூறியுள்ளார்.