நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தன்னுடைய வீட்டு லாக்கரில் இருந்த நகைகள்  கொஞ்சம் கொஞ்சமாக திருடப்பட்டிருப்பதாகவும், இதில் வீட்டு வேலைக்காரி ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசனுக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் புகாரளித்திருந்தார். இதுகுறித்து தேனாம்பேட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ஐஸ்வர்யா வீட்டு பணிப்பெண்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நகைகள் கொள்ளை போன வழக்கில் நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தனது வீட்டில் நகைகள் திருடப்பட்டதாக ஐஸ்வர்யா அளித்த புகாரின் பேரில், அவரது வீட்டுப் பணிப்பெண்ணை போலீசார் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து நகைகள் மீட்கப்பட்ட நிலையில், புகாரில் குறிப்பிடப்பட்டதை விட அதிக நகைகள் இருப்பது குறித்து ஐஸ்வர்யாவிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.