தோல்வி பயத்தால் தன்னுடைய பெயரில் 9 வேட்பாளர்களை உருவாக்கி இருக்கிறார்கள் என வேலூர் தொகுதி பாஜக கூட்டணியைச் சேர்ந்த புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். கேவி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் நேற்று பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘என்னுடைய பெயரிலேயே 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தது எதர்ச்சியாக நடந்ததாக தெரியவில்லை.

தற்போதைய எம்.பி., நான் முன்னணியில் இருக்கிறேன் என்ற தோல்வி பயத்தால் இவ்வளவு பேரை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அது நடக்காது’ என்றார்.