ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்டில் 4வது வெற்றியை பெற்றது. அவரது கேப்டன் பொறுப்பில் இந்தியா விளையாடிய முதல் 4 போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.. தோல்வியை தழுவவில்லை. இதன் மூலம் அவர் தோனியின் சாதனையை சமன் செய்தார். தோனியின் தலைமையில் முதல் 4 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. தோனி, ரோஹித் சர்மா, பாபர் அசாம் ஆகிய 3 கேப்டன்கள் மட்டுமே முதல் 4 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.