தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி உதவி பெறுவதற்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தமிழ்நாடு தொழிலாளர்கள் நல வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொழிலாளர் நலநிதி தொகையை வாரியத்திற்கு செலுத்த வேண்டும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

இதில் நலநிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 12000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை, பள்ளி பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரில் அல்லது http://www.lwd.tn.gov.in/என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.