வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோம் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தொண்டர்களாலயே கட்சித் தலைவராகவும் முதல்வராகவும் ஆக்கப்பட்டேன். ஒரு அரசியல் இயக்கம் 75 ஆண்டுகள் நிலைத்திருப்பது ஒன்றும் சாதாரணமானது கிடையாது. தோன்றிய காலம் முதல் அதே இளமை மற்றும் உணர்வோடு இருப்பது திமுக தான். 2 கோடி திராவிடக் கொள்கைவாதிகளின் கோட்டை என திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.