தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறு சீரமைப்புக்கான கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா துணை முதல்வர் கே.டி சிவக்குமார், பஞ்சாப் முதல்வர் பகவான் உள்ளிட்ட ஏழு மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு பிறகு திமுக எம்பி கனிமொழி அளித்த பேட்டியில் கூறியதாவது, தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் 1975-ஆம் ஆண்டில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறையே அடுத்து 25 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும். கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலங்களிலும் இதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.

கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. தொகுதி மறு சீரமைப்பிற்கு வெளிப்படை தன்மையுடன் அனைத்து மாநிலங்களின் கருத்துகளும் கேட்கப்பட வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் மறு சீரமைப்பு என்பதற்கு எதிராக ஒரு குடையின் கீழ் அனைவரும் திரண்டு உள்ளோம் என கூறியுள்ளார்.