
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும் காலை லேசான பனி மூட்டம் இருக்கும். இதனை அடுத்து புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் வருகிற பத்தாம் தேதி லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகள், தென்கிழக்கு அரபிக் கடலின் தெற்கு பகுதிகள், மாலத்தீவு பகுதிகளில் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். இதனால் அப்பகுதிகளில் மீனவர்கள் இன்று மீன் பிடிக்க சொல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.