மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் பல்வீர் சிங் சப்ரா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் யோகா பயிற்சி வழங்கி வந்துள்ள நிலையில் பயிற்சிக்கு இடையில் ராணுவ உடை அணிந்து கொண்டு கையில் தேசிய கொடியை ஏந்தி தேசப்பற்று பாடலை பாடினார்.

அப்போது திடீரென தள்ளாடிய அவர் கீழே விழுந்தார். அவர் நடனம் ஆடும் போது கீழே விழுந்ததாக அங்கிருந்தவர்கள் நினைத்த நிலையில் நீண்ட நேரமாக அவர் எழவில்லை. இதனால் அருகில் சென்று பார்த்த போது பல்வீர் சிங் சுயநினைவின்றி கிடந்தார். இதனால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.