தூய்மை பணியாளர்களுடைய மேம்பாட்டிற்காக 50 கோடியில் வைப்பு நிதி உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை கடந்த வருடம் முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .இந்த திட்டத்தின் கீழ் முக்கிய தூய்மை பணியாளர்கள் கணக்கெடுக்கப்படுவார்கள்.

அவர்களுடைய விவரங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பிறகு முக்கிய தூய்மை பணியாளர்கள் பட்டியல் அவர்களுடைய தன்மைக்கு ஏற்ப பாதுகாப்பான முறையில் பணி செய்வது குறித்த பயிற்சிகள் வழங்கப்படும். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு 50 கோடி அளவில் வைப்பு நிதி உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.