நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்து பேசினார். இந்த விஷயம் பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில் இது தொடர்பாக சீமானிடம் கேட்டபோது சினிமா மற்றும் அரசியல் பற்றி நிறைய விஷயங்கள் பேசியதாக கூறினார். அதன் பிறகு சமீபத்தில் அவர் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றும் நான் அரசியல் சூப்பர் ஸ்டார் என்றும் இரண்டு சூப்பர் ஸ்டாரர்களும் ஒன்றாக சந்தித்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல் அய்யோ அம்மா என்று பலர் கதறுவதாக கூறினார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் அந்த கட்சியிலிருந்து விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார். அதாவது சமீப காலமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் பலர் விலகி வரும் நிலையில் தற்போது மூத்த நிர்வாகி ஒருவர் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

அதாவது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது ரஜினிகாந்த் ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விஷக்கிருமிகள் நுழைந்து விட்டதாகவும் தீவிரவாதிகள் நுழைந்துவிட்டதாகவும் கூறினார். எங்களை தீவிரவாதிகள் மற்றும் விஷ கிருமிகள் என்று கூறிய ரஜினியை இன்று சீமான் அவருடைய வீட்டிற்க்கே சென்று நேரடியாக பார்த்துள்ளார். ரஜினி கூறியதை அனைவரும் அறிவீர்கள். அதே சமயத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை வீடு வீடாக சென்று நடிகர் விஜய் சந்தித்து உதவி செய்தார். அப்படிப்பட்ட விஜய்யை அவர் லாரியில் அடிபட்டு செத்துவிடுவார் என்று கூறுகிறார். மேலும் இதனால் தான் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அவர் கூறியுள்ளார்.