தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கு சொந்தக்காரர் ஆவார். ஆனால் ஒரு காலத்தில் இவர் பணக்கஷ்டத்தில் இருந்துள்ளார். அப்போது பெப்சி குளிர்பான கம்பெனி விளம்பரத்தில் நடிக்க அஜித்தை கேட்டு வந்துள்ளனர்.

அந்த விளம்பரத்தில் நடிக்க 1 கோடி ரூபாய் சம்பளமாக கொடுப்பதாக சம்பந்தப்பட்ட கம்பெனி கூறியுள்ளது. ஆனால் தான் பணக்கஷ்டத்தில் இருந்த போதிலும் அந்த விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித் மறுத்துள்ளார். ஏனெனில் தான் அந்த விளம்பரத்தில் நடித்தால் என் ரசிகர்கள் அந்த குளிர்பானத்தை வாங்கி அருந்துவார்கள். இது தவறான எடுத்துக்காட்டாக மாறிவிடும் என்பதால் ரசிகர் மேல் உள்ள அன்பின் காரணமாக அந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்தார். இந்த தகவலை அன்றைக்கு அஜித்துடன்  இருந்த வி.கே சுந்தர் என்பவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.