அகமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில வினாடிகளில் ஒரு கல்லூரி விடுதி கட்டிடத்தின் மேல் விழுந்து வெடித்த சிதறியதில் விமானத்தில் இருந்த 241 பயணிகள் உயிரிழந்தனர். இதில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில் கல்லூரி விடுதியின் மேல் விழுந்ததால் மருத்துவ மாணவர்களும் உயிரிழந்தனர். அதன்படி மொத்தம் 270 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்ததில் விஷ்வாஷ் குமார்‌ ரமேஷ் (38) என்ற இந்திய வம்சாவழியை சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகன் மட்டுமே உயிர் பிழைத்தார்.

 

இந்நிலையில் விமான விபத்துக்கு பிறகு விஷ்வாஷ்குமார் உடம்பில் காயங்களுடன் நடந்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் தீப்பிழம்பில் இருந்து பதறி நடந்து வரும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த நபர் ஹாஸ்பிடலில் இருந்தபோது அவசரகால கதவை திறந்து வெளியே குதித்ததாகவும் தான் கண்விழித்த போது தன்னை சுற்றி பிணங்கள் மட்டுமே கிடந்ததாகவும் கூறினார். தற்போது உயிரிழந்தவர்களின் சடலங்களை டிஎன்ஏ மூலமாக அடையாளம் கண்டு ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 101 உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

இதேபோன்று கல்லூரி விடுதியின் மேல் விமானம் விழுந்த போது அங்கிருந்த மாணவர்கள் சிலர் ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிர்த்தப்பினர். அதாவது இரண்டாவது மாடியில் இருந்து சில மாணவர்கள் பெட்ஷீட் மூலமாக கீழே இறங்கி குதித்து உயிர்த்தப்பினர். மேலும் இது குறித்த வீடியோவும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.