
தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணிகளுக்கு உதவியாக சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு திட்டமிட்டு உள்ளது. 2024 அக்டோபர் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
பண்டிகைக்காக வெளியூரில் செல்ல விரும்பும் பயணிகளுக்கு 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மீண்டும் தீபாவளி பண்டிகை முடிந்து வரும் பயணிகளுக்காக 12,606 சிறப்பு பேருந்துகள் 31-ஆம் தேதி முதல் இயக்கப்படும். இந்த ஏற்பாடுகள் பயணிகளின் நெரிசலை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் தங்கள் பயண விபரங்களை தெரிந்துகொள்ள 94450 14436 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மேலும், ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் அளிக்க 1800 425 6151 என்ற தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம்.