கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மோட்டூர் கிராமம் தலை வாசல் பகுதி உள்ளது. இங்கு மாரிமுத்து ‌(37)-ருக்மணி (30) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் மாரிமுத்துவின் தம்பி முத்துக்குமார் (28). அண்ணன் தம்பி இருவருக்கும் நிலத்தகராறு இருந்தது. இவர்கள் இருவருக்கும் தகராறு முற்றிய  நிலையில் நேற்று இரவு தீபாவளி பண்டிகையின் போது தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு முத்துக்குமார் சென்றுள்ளார். அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தன்னுடைய அண்ணன் மற்றும் அண்ணன் மனைவியை சரமாரியாக விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். மேலும் இந்த கொலை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தப்பி ஓடிய முருகனை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.