பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம்   முஷாரி கிராமத்தைச் சேர்ந்த 2 குழந்தைகளின் தாயான மஹாலி தேவி (வயது 30) என்ற பெண்   தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது கணவர் சுஜித் மஞ்சி, அருகிலுள்ள மோகன் கந்தா கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பார் நடனக் கலைஞர்களும், இசைக்குழுவினரும் கலந்து கொண்டனர். அப்போது சுஜித், பெண் பார் நடனக் கலைஞர்களுடனும் சில புகைப்படங்கள் எடுத்துள்ளதாக கூறபடுகிறது.

இந்த புகைப்படங்கள் அவரது மொபைலில் இருந்ததை மனைவி மஹாலி தேவி பார்த்தபோது கடும் கோபமடைந்தார். இதை தொடர்ந்து இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மனைவி, கணவரை திருமண உறவை மீறியதுபோன்று பழி சுமத்தியதுடன்  தொடர்ந்து சண்டை அதிகரித்துள்ளது.   இந்நிலையில், சம்பவ நாளன்று கணவர் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பின், தனிமையில் இருந்த மஹாலி தேவி, வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சில நேரத்திற்குப் பிறகு வீடு திரும்பிய கணவர், மனைவியை கயிற்றில் தொங்கிய நிலையில் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  உடனே அவர் மனைவியை கீழே இறக்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால் அங்கு சென்றதும் மருத்துவர்கள் அவரை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இதன் பிறகு சுஜித் மஞ்சி, உடலை சேலம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கியாஸ்பூர் கங்கா சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று தகனத்திற்கான ஏற்பாடுகளை செய்தார்.

இந்த தருணத்தில் யாரோ ஒருவர் காவல்துறைக்கு தகவல் அளித்ததையடுத்து, டெல்மார் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டுக் கொண்டு பிரேத பரிசோதனைக்காக பீகார்ஷரிப் சதார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

காவல் நிலைய அதிகாரி தெரிவித்ததாவது: “முதல் பார்வையில் இது தற்கொலை வழக்காக தெரிகிறது. மேலும், அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள்  உள்ளனர். அவரது தாய்வழிக் குடும்பத்தினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார். உண்மையில், ஒரு சாதாரண சண்டை மற்றும் அதற்கடுத்த நிமிட அவசர முடிவு , ஒரு குடும்பம் சிதைந்தது போவதற்கு காரணமாக அமைந்தது  என்பது தான் வலி மிகுந்த பரிதாபம் .. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.