
ஈரோடு மாவட்டத்திலுள்ள நூர் பாலையத்தில் ஒரு வட மாநில தம்பதி வேலை பார்க்கிறார்கள். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த உபேந்தர் என்ற ஒரு 22 வயது வாலிபரும் வேலை பார்க்கிறார். இவர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கும் அந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் திருமண ஆசை காட்டி சிறுமியுடன் அவர் பழகி வந்தார்.
இந்நிலையில் உபேந்தர் திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்த நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் இமாச்சல் பிரதேசத்தில் இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இமாச்சல் பிரதேசம் சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர். பின்னர் உபேந்தரை கைது செய்த நிலையில் அவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் அவரை குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.