
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது திருமணம் எப்படி நடைபெறுவது என்பது தொடர்பான ஒத்திகை நடைபெற்றது பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் தனக்கு திருமணம் நடைபெற இருப்பதால் ஊருக்கு சென்று கொண்டிருப்பதாக கூறினார்.
அதோடு திருமணத்தை நினைத்து தனக்கு பயமாக இருப்பதாகவும் கூறினார். இதைக் கேட்ட விமான பணிப்பெண்கள் அவருக்கு விமானத்திலேயே திருமண ஒத்திகை செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி விமான பணிப்பெண் ஒருவர் புதுப்பெண் போல அலங்கரிக்கப்பட்டார். பின்னர் அவர்களுக்குள் திருமணம் எப்படி நடைபெறும் என்பது தொடர்பான ஒத்திகைகள் நடைபெற்றது. இறுதியில் இருவரும் முத்தங்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.
View this post on Instagram