இந்தியர்கள் அனைவருக்குமே ஆதாரங்கள் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டு இல்லாவிட்டால் அரசு மற்றும் நிதி சார்ந்த பல வேலைகளை முடிக்க முடியாது. நலத்திட்ட உதவிகளும் கிடைக்காமல் போகும் . ஆதார் கார்டில் ஏதேனும் தவறு இருந்தால் செல்போன் எண்ணை புதுப்பிக்க விரும்பினால் அதை உடனடியாக செய்யலாம். குறிப்பாக பெண்கள் திருமணத்திற்கு பிறகு ஆதார் அட்டையில் தங்களுடைய குடும்பத்தின் பெயர், முகவரி போன்றவற்றை மாற்ற விரும்புவார்கள். ஆனால் அதை எப்படி செய்வது என்று அவர்களுக்கு தெரியாமல் இருக்கும்.

அதை அப்டேட் செய்வதற்கு கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் ஆதாரில் உள்ள கடைசி பெயர் போன்றவற்றை புதுப்பிப்பதற்கு எளிதான வழி உள்ளது. பெண்ணாக இருந்து உங்களுடைய திருமணத்திற்கு பிறகு குடும்ப பெயர் மற்றும் முகவரியை மாற்றி விரும்பினால் உங்கள் கணவருடன் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். அங்கு அப்டேட் செய்வதற்கான படிவத்தைப் பெற்று அதில் பெயர், முகவரி போன்றவற்றை நிரப்ப வேண்டும்.

அதன்பிறகு பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தோடு கணவரின் ஆதார் அட்டை, திருமண சான்றிதழ் திருமணம் பத்திரிக்கை போன்றவற்றை இணைக்க வேண்டும். இந்த அனைத்து ஆவணங்களோடும் அசல் ஆவணத்தையும் கையில் வைத்திருக்க வேண்டும். பூர்த்தி செய்த படிவத்தை ஆவணங்களோடு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இப்போது நீங்கள் பயோமெட்ரிக் பதிவு செய்து அப்டேட்டுக்காக கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பிறகு உங்களுடைய தகவல்கள் சில நாட்களிலேயே புதுப்பிக்கப்படும். வெறும் 50 ரூபாய்க்கு நீங்கள் விரும்பினால் PVC  ஆதார் அட்டை உங்களுடைய வீட்டிற்கு டெலிவரி செய்து வாங்கிக் கொள்ளலாம்.