
இமாச்சல் பிரதேச மாநிலத்தில் சகி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஜிதேஷ் சர்மா என்ற வாலிபருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவர் பல கனவுகளுடன் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் ஆன சில நாட்களில் இவருக்கு அவருடைய மனைவி அதிர்ச்சியை கொடுத்துவிட்டார். அதாவது பணம் மற்றும் நகைகளை தூக்கிக் கொண்டு அவருடைய மனைவி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜிதேஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இது தொடர்பாக அந்த வாலிபர் கொடுத்த புகாரில் பால்தேவ் சர்மா என்ற தரகர் மூலமாக பபிதா என்ற பெண்ணை கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி அவர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த பெண்ணுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாததால் திருமணத்தை பதிவு செய்யவில்லை. இந்தப் பெண்ணை கரம்பிடிக்க 1.5 லட்சம் ரூபாயை தரகருக்கு அவர் கொடுத்துள்ளார். திருமணம் முடிந்த 2நாட்களுக்குப் பிறகு தன்னுடைய தாயை பார்ப்பதற்காக செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்ற பபிதா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அதன் பிறகு தரகர் மற்றும் பபிதாவை அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வாலிபர் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.