தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் பகுதியில் ஒரு வெல்லம் மற்றும் சர்க்கரை தயாரிக்கும் ஆலை அமைந்துள்ளது. இங்கு கர்நாடகாவை சேர்ந்த அமல்ராஜ் என்ற 28 வயது வாலிபர் வேலை பார்த்து வந்துள்ளார்.

இவர் சக பணியாளர்களுடன் தங்குகிறது அங்கு வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவ நாளில் அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஒருவரது மனைவி குளித்துக் கொண்டிருந்தார். இதனை அமல்ராஜ் பார்த்துள்ளார்.

இதனை பார்த்த அந்த பெண் உடனடியாக செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னுடைய கணவர் மற்றும் அமல் ராஜின் அக்கா ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். இதனால் அமல்ராஜ் அக்கா மற்றும் அவரது கணவர் ஆகியோர் தொடர்பு கொண்டு அவரை திட்டியுள்ளனர்.

இதனால் மனமடைந்த அமல்ராஜ் மறுநாள் மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.