
உத்தரப்பிரதேச மாநில ஹபூர் மாவட்டத்தில் உள்ள நங்கோலா கிராமத்தில், சுபம் தியாகி என்ற நபர், தனது மனைவி நேஹா வீட்டில் இருந்தபோது நகை மற்றும் பணம் கொள்ளை போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். சிசிடிவி மற்றும் சிடிஆர் ஆதாரங்களை வைத்து போலீசார் உண்மையை கண்டுபிடித்தனர்.
சனிக்கிழமை மதியம் 1:15 மணியளவில் ஒரு இளைஞன், LIC முகவராக நடித்துக்கொண்டு வீட்டின் கதவைத் தட்டியதாக மனைவி கூறியிருந்தார். கதவைத் திறந்தவுடன், அந்த நபர் மயக்க மருந்து தெளித்து பெண்ணையும் குழந்தையையும் மயக்கமடையச் செய்து, அலமாரியில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகை, ரூ.1.5 லட்சம் பணமும் திருடிவிட்டதாக அவர் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது வீட்டிற்கு வந்ததாக கூறப்படும் வாலிபர் 23 வயதுடைய நிகம் என்பது தெரியவந்தது. அவர் ஏற்கனவே நேஹாவிடம் பலமுறை பேசியுள்ளார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
சம்பவம் நடந்த அன்று 2 பேரும் சேர்ந்து திட்டமிட்டு நகை, பணத்தை திருடி விட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதனால் போலீசார் நிகம், நேஹா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.