திருப்பதி மலைப்பகுதியில் செப்டம்பர் மாதம் இறுதி வரை இருசக்கர வாகனங்களில் பயணிக்க தேவஸ்தான நிர்வாகம் இன்று முதல் நேர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரு மாதங்களில் வனவிலங்குகள் குட்டிகளை இன்று அவற்றுக்கு பாலூட்டும் காலமாகும்.

அதனால் இன்று முதல் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஆகியோர் இருசக்கர வாகனங்களில் திருப்பதி மலைப்பகுதிகளில் பயணிக்கலாம் எனவும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்க தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.