பிரபல கோவில்களில் ஒன்றான திருப்பதியில் தினசரி பெரும்பாலான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதோடு சென்ற மாதம் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவஸ்தானம் புது மாற்றம் ஒன்றை நடைமுறைபடுத்தியது. இதனால் கடந்த 4 வருடங்களில் முதல் முறையாக ஜூன் 12-ம் தேதி ஒரே நாளில் 92,238 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதனபடி, தேவஸ்தானம் 1 மணி நேரத்திற்கு 5,500 பக்தர்கள் எனும் அடிப்படையில் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதித்தனர்.

இதன் வாயிலாக தினசரி 80,000 பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்கின்றனர். அதுமட்டுமின்றி மக்கள் பலர் தரிசனம் செய்ய கோவிலுக்குள் கொடிக் கம்பத்திற்கு அருகிலுள்ள வெண்டி வாக்கிலி எனும் வெள்ளி கதவில் இருந்து ஒரே வரிசையில் பக்தர்களை கருவறைக்கு அனுப்ப ஜூன் 12-ம் தேதி முதல் முறையாக முயற்சி செய்யப்பட்டது. இதனால் 1 மணிநேரத்தில் 6250-க்கு அதிகமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். அதனால் அன்றைய தினம் கடந்த 4 வருடங்களில் இல்லாத அளவு 92238 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.