திருப்பதி மற்றும் காட்பாடி இடையே இயங்கும் ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் அக்டோபர் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் திருப்பதியில் இருந்து காலை 6.50 மணிக்கு காட்பாடி புறப்படும் பயணிகள் ரயில் மறு மார்க்கமாக காட்பாடியிலிருந்து இரவு 9.15 மணிக்கு திருப்பதி செல்லும் ரயில் அக்டோபர் 15ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றது.

அதனைப் போலவே காட்பாடியில் இருந்து காலை 9.50 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் விரைவு ரயில் மறு மார்க்கமாக ஜோலார்பேட்டையில் இருந்து பகல் 12.45 மணிக்கு காட்பாடி செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகின்றது. மேலும் விழுப்புரத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு திருப்பதி செல்லும் விரைவு ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும் எனவும் மறுமார்க்கமாக இந்த ரயில் திருப்பதிக்கு பதில் மாலை 4.35 மணிக்கு காட்பாடியில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.