கன்னியாகுமரி மற்றும் டெல்லி இடையே இயக்கப்படும் திருக்கு அதிவிரைவு ரயில் ஜனவரி மாதம் முதல் வழக்கம்போல இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் ஆக்ரா இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் பல்வேறு ரயில்கள் ஜனவரி மாதத்தில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி செல்லும் திருக்கு அதிவிரைவு ரயில் ஜனவரி 10, 12, 17,19,24,26,31 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளிலும் மறு மார்க்கமாக இயக்கப்படும் ரயில் ஜனவரி 13, 15, 20, 22, 27, 29 மற்றும் பிப்ரவரி 5 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட தேதிகளில் திருக்கு அதிவிரைவு ரயில் வழக்கம் போல இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.