திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனுவை வாபஸ் பெற்றார் மன்சூர் அலிகான்.
முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மன்சூர் அலிகானின் மனு வாபஸ் பெற்றுள்ளது. ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு பதில் நுங்கம்பாக்கம் என தவறுதலாக குறிப்பிட்டதால் மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல, நேரத்தை வீணடிக்க வேண்டாம் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கண்டித்துள்ளார். சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த புதிய மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.