திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கராபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள கண்டன பதிவில்,

மறைந்தும் மக்கள் உள்ளங்களில் வாழும் இதய தெய்வம் அம்மா அவர்களை அவமானப்படுத்திய ஸ்டாலின் அரசுக்கும் அமைச்சர் சக்ராபாணிக்கும் எங்களுடைய கண்டனங்கள். மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தில் உள்ள அம்மா புகைப்படங்களை குப்பைத்தொட்டியில் வீசினால் அம்மாவின் சாதனைகளை மறைத்து விட முடியுமா.?

கடந்த 2006-2011 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் இருண்டுபோன தமிழகத்திற்கு ஒளி கொடுத்தவர் ஜெயலலிதா. மின்வெட்டு தமிழ்நாட்டை மின்மிகை மாநிலம் ஆக்கியவர். ஆட்சிக்கு வந்தது முதல் மின்கட்டண உயர்வை மட்டும் சரியாக செய்யும் இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அவமான செயலுக்கு தமிழக மக்களுடன் சேர்ந்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 2026 இல் அமைந்து தக்க பதிலடித்தது என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.