தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைக்க போவதாக சமீப காலமாக செய்திகள் வெளிவந்த நிலையில் நேற்று தமிழக கட்சி கழகம் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்காது என்பதை தெளிவுபடுத்தியது. அதன் பிறகு தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் தான் கூட்டணி அதற்கு சம்மதித்து வந்தால் கூட்டணி அமைக்கலாம் இல்லையெனில் தனித்தே போட்டியிடும் என்றும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பது தான் தமிழக வெற்றி கழகத்தின் நோக்கம் என்றும் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நாங்கள் கூட்டணி குறித்து இதுவரை தமிழக வெற்றிக்கழகத்துடன் பேசவில்லை.

பாஜக அல்லாத ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்று ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி தெளிவுபடுத்திவிட்டார். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருப்பதால் நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து பேசவில்லை. அதன் பிறகு அதிமுக தலைமையை ஏற்று வரும் கட்சிகளுடன் மட்டும் தான் கூட்டணி அமைப்போம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் கண்டிப்பாக அதிமுகவுடன் கூட்டணிக்கு வர வேண்டும். மேலும் அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகள் எங்களுடன் கூட்டணி அமைக்க வரலாம் என்றும் நாங்கள் இதுவரை கூட்டணி தொடர்பாக விஜய் உட்பட எந்த கட்சியுடனும் பேசவில்லை என்று கூறினார்.