திமுக கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என 45 நிமிடம் என்னிடம் மூளைச்சலவை செய்தார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். அரியலூரில் பேசிய அவர், “2009 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக மட்டுமே இருந்தது. அதிமுக கூட்டணித் தலைவர்கள் என்னை அழைத்து திமுக கூட்டணியில் இருந்து விலகுமாறு கோரினார்கள். ஆனால், அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு திமுகவோடு இணைந்து தேர்தலை சந்தித்தோம்” என்றார்.