தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் திமுக அதே கூட்டணியில் களம் காணும் நிலையில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தற்போது திமுக கூட்டணியில் தங்களுக்கு அதிக சீட் ஒதுக்க வேண்டும் என முயற்சி செய்தியாளர்கள் சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது, திமுக கூட்டணியில் அனைத்து தோழமைக் கட்சிகளையும் அரவணைத்து செல்வதை வலியுறுத்துகிறேன். தற்போது உள்ள ஒற்றுமையை மேலும் கட்டிக் காக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இருக்கிறது.

திமுகவை கூட்டணி கட்சிகளை மதிப்பது குறித்து எந்தவிதமான குறையும் சொல்ல முடியாது. இதே நிலை தொடர வேண்டும். அன்றைய சூழலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வெற்றிபெறக்கூடாது என்பதற்காக கூட்டணியில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு சம்மதம் தெரிவித்தோம். அதுதான் எங்கள் கட்சியின் வரலாற்றில் முதல் முறையாக குறைந்த தொகுதியில் போட்டியிட்டது.

இது தமிழக மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என் தோழர்களுக்கும் நல்லதாக இருக்காது. எனவே அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூடுதல் சீட்டுகள் வேண்டும். இதனை ஒதுக்குவது திமுகவின் கடமை. கடந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இரண்டு இடங்களில் வென்றது. மேலும் இந்த முறை பத்துக்கும் மேற்பட்ட இடங்களை கேட்டு பெறுவதற்கு சிபிஎம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.