உசிலம்பட்டி திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் திமுக சேர்மன் ரஞ்சனியின் கணவருமான சுதந்திரம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோட்டையாக இருந்த உசிலம்பட்டியை திமுக பக்கம் கொண்டு வந்ததில் இவரின் பங்கு அதிகம். மாரடைப்பு காரணமாக உயிரிழந்த இவரின் உடலுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பெரியசாமி மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். அது மட்டுமல்லாமல் இவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.