பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 416 ரூபாய் முதலீடு செய்தால் 25 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் 7.1% வட்டி வழங்கப்பட்டு வரும் நிலையில் 100% பாதுகாப்பான சேமிப்பு திட்டம் ஆகும். நாள் ஒன்றுக்கு 416 ரூபாய் வீதம் ஒரு மாதத்திற்கு 12,500 ரூபாய் முதலீடு செய்தால் ஒரு வருடத்திற்கு 1.50 லட்சம் ஆகும். தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் முடிவில் மொத்தம் 40.68 லட்சம் கிடைக்கும்.

இதில் உங்களுடைய முதலீட்ட தொகை 22.50 லட்சம். வட்டி என்பது 18.18 லட்சம் ஆகும். தற்போது வழங்கும் 7.1% வட்டி அளவில் கணக்கிடப்பட்டு இந்த மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 15 ஆண்டுகளில் இதை எடுக்க விரும்பவில்லை என்றால் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் நீட்டித்துக் கொள்ளலாம்.