தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் மற்றும் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது, கல்லூரி வாழ்க்கை மிகவும் அழகானது. இந்த நேரத்தில் எடுக்கும் அனைத்து முடிவுகளும் உங்கள் எதிர்காலத்திற்குரியது. நீங்கள் நல்ல நண்பரோடு பழகினால் உங்கள் வாழ்க்கை நன்றாக அமையும்.

கெட்ட நண்பர்களோடு பழகினால் வாழ்க்கை வேறு மாதிரி மாறிவிடும். தினமும் உங்கள் பெற்றோருக்காக 10 நிமிடம் செலவளியுங்கள். அதில் அவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கையின் ஆசிர்வாதமாக அமையும். மேலும் படிப்பை முடித்துவிட்டு நீங்கள் வெளியில் செல்லும்போது சிறந்த மற்றும் திறமையான ஒரு நபராக இருக்க வேண்டும் என்று கூறினார்.