பாமக கட்சியின் எம்எல்ஏ அருளுக்கு தற்போது அந்த கட்சியின் நிறுவனரும், தலைவருமான ராமதாஸ் புதிய பெறுப்பு வழங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாமக எம்எல்ஏ அருள் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை ராமதாஸ் நேரில் சென்று பார்த்தார். இதேபோன்று பாமக கௌரவ தலைவர் ஜிகே மணியும்  நெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையில் அன்புமணி ராமதாஸ் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டுள்ள அருள் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்ததாக கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்த அருள் நான் என்ன இறந்துவிட்டேனா.? கூட்டு பிரார்த்தனை செய்வதற்கு. இறந்து போனால் தான் கூட்டு பிரார்த்தனை செய்வார்கள் என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்நிலையில் தற்போது ராமதாஸ் எம்எல்ஏ அருளுக்கு பாமக இணை பொது செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் பொதுச் செயலாளராக இருந்த வடிவேல் ராவணனை ராமதாஸ் கட்சியிலிருந்து நீக்கிவிட்டு அதற்கு பதிலாக முரளி சங்கர் என்பவரை பாமக கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்தார். இதைத்தொடர்ந்து தற்போது துணைப் பொதுச் செயலாளராக அருள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியில் இமயமலை உயரத்திற்கு அவருக்கு பொறுப்பு வழங்கியுள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் அருள் எப்போதும் என்னுடன் தான் இருப்பார் என்றும் கூறியுள்ளார்.