இலங்கையில் படகு பழுதாகி நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவர்கள் இருவரை மீட்டு வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மைக்கேல் மற்றும் விஜயகுமார். இவர்கள் இருவரும் பைபர் படையில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது இவர்களது படகுகள் இன்ஜின் பழுதாகி திசை மாறி வேதாரண்யம் அருகே ஆற்காட்டுதுறை கடற்பகுதிக்கு சென்றது. இதையடுத்து இலங்கை மீனவர்கள் இருவரையும் ஆற்காட்டு துறை மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர். அனுமதி இன்றி வந்த இருவரிடமும் வேதாரணியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.