பசுபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான ரிங் ஆப் ஃபயர் மீது இந்தோனேசியா இருக்கின்ற காரணத்தினால் அங்கு அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் சுலாவேசி பகுதிகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆனது ரிக்ட்டர் அளவுகோலில் 6.1 என பதிவாகியுள்ளது.

இதனையடுத்து அமெரிக்க புவியியல் ஆய்வின்படி கூறப்பட்டுள்ளதாவது, நிலநடுக்கத்தின் மையம் கொரண்டலோவின் தென்கிழக்கு கடலுக்கு அடியில் 147 கிலோ மீட்டர் தொலைவில் உணரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.