
கோவை மருதமலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட வனத்துறையினர் கட்டுப்பாட்டில் தாய் யானை ஒன்று இருந்துள்ளது. அந்த யானையின் குட்டி பெரிய யானை கூட்டத்திற்கு சென்ற நிலையில் வனத்துறையினர் யானை குட்டியை குழுவாக பிரிந்து தேடினர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் இரவு 10.30 மணி அளவில் குட்டி யானை தன்னுடைய தாய் இருப்பிடத்தை சரியாக கண்டுபிடித்து பார்க்க வந்துள்ளது. தாயைப் பார்த்து சுமார் இரண்டு மணி நேரம் கொஞ்சி விளையாடிய பிறகு காட்டிற்குள் சென்றது.
ஆண் யானைகள் இரண்டு மற்றும் பெரிய பெண் யானை என யானை கூட்டமே குறித்த குட்டி யானைக்காக காத்திருந்து அழைத்துக் கொண்டு மீண்டும் காட்டுக்குள் சென்றது. இதனை சுமார் நான்கு குழுக்கள் பார்வையிட்டுக் கொண்டிருந்தன. நடக்க முடியாமல் மோசமான நிலையில் இருந்த தாய் யானை தற்போது மருத்துவர்களால் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
From despair to hope and from struggle to triumph, this is the incredible story of a wild elephant mother’s fight for survival backed by a dedicated and professional team of foresters and vets from Coimbatore in Tamil Nadu Forest Department .The mother elephant was found sick… pic.twitter.com/w2YsuBHazI
— Supriya Sahu IAS (@supriyasahuias) June 3, 2024