சென்னை தாம்பரம் மற்றும் மங்களூர் இடையே செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 28ஆம் தேதி வரை வாரம் தோறும் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 29ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் பகல் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு மங்களூர் சென்றடையும்.

மறு மார்க்கமாக மங்களூரில் இருந்து செப்டம்பர் 30ம் தேதி முதல் சனிக்கிழமை தோறும் பகல் 12 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 5:00 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மேலும் இந்த ரயில் சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.