சென்னை தாம்பரத்தில் இருந்து கொல்லத்துக்கு சபரிமலை சீசனை முன்னிட்டு டிசம்பர் 16ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து சனிக்கிழமை பகல் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.45 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறு மார்க்கமாக கொல்லத்திலிருந்து டிசம்பர் 17ஆம் தேதி காலை 10.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 5.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் சென்னை எழும்பூ, பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, எர்ணாகுளம், கோட்டயம், மாவேலிக்கரை வழியாக இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லக்கூடிய விரைவு ரயில் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் சேவையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.